Dec 14, 2008

ஈஷா…


ஈஷா…

ஆம்... ஒவ்வொரு மனிதனுள்ளும்

ஓர் ஈசன் வாழ்கிறான்…

எனக்குள்ளும் ஒரு ஈசன்…

நான் சிரிக்கையில்

என் சிரிப்பலைகளாய்….

நான் அழுகையில்

என் கண்ணீர்த் துளியாய்…

நான் இமைக்கையில்

என் இமைப் பொழுதாய்…

என் உணர்வுகளாய்…

என் அசைவாய்… என் உளமாய்…..

என் உணர்வுகளைப் பிரதிபலிப்பவன்……

“ஓம்” எனக் கூறுகையில்

அடிமனதின் ஆழத்திலிருந்து எழுபவன்

எனக்குள்ளும் ஓர் ஈசன் இருக்கிறான்

என நான் உணரக் காரணமாயிருந்த

ஈஷா…

நான் உன்னடி சேர வேண்டும்…….



1 comment:

அரங்கப்பெருமாள் said...

மாசற்ற கொள்கை மனதிற் கொண்டால் ஈசனைக் காட்டும் உடம்பு - திருமூலர்

Post a Comment