Nov 8, 2014

உளறுகிறேன்!!!!

இரவின் நீட்சியில்
நினைவுகள்
சிறகு முளைக்கப்பெற்று

தூவானம் ஓயாத பொழுதுகளிலும்
கடைசி பறவையாய்
உடல் நனைத்து
சிறகுலர்த்திச் செல்கின்றன..

பிரிவுணர்ச்சியின் வலியும்
நினைவுகளின் சுகமும்
தக்கடையின் இரு தட்டுகளாய்..

முகத்திரை கிழித்தெறிந்து
கண்ணீரை அப்பிக்கொள்ள..
அட..
ஒழுங்காய் ஒரு காரணம்???

ஏதோ ஒன்றின் இழப்பில்
ஏதோ ஒன்றை அடைதல்
இயற்கையின் எடுத்தோத்து

நெஞ்சுக்கூட்டின் நடுவே
ஆழ்துளை கிணறு செய்து
இனம்புரியா உணர்ச்சிகளை
வாரி வெளியிறைக்கும்
முயற்சியில்
தோற்றுக்கொண்டே இருப்பது
இரவின் ஊழ்வினை

தூக்கத்தில்
உளறவில்லை..
தூங்காமல் உளறுகிறேன்..