Feb 10, 2014

எழுதித்தீராதது

உனக்கும் எனக்குமான 
உணர்வுகள்
சில வரி சிலாகிப்புக்குள்
அடங்கிப்போக
மறுதலிக்கின்றன...

சேர்த்து வைத்த
காதலும் காமமும்
எழுதிவிடின்
இளைத்திடுமோ???

எழுதித் தீர்த்திடவே
தேடியலைகிறேன்..
பாரம் ஏற்றுவதில்மட்டுமே
குறியாய் இருக்கின்றன..

அகத்திணையில்..
கிட்டாத வார்த்தைகளை
எட்டாத்தொலைவு வரை
தேடிச் சென்றும்
இல்லாமல் திரும்பிவருதல்
ஏமாற்றமில்லை!!!