Aug 15, 2023

வானம் பொய்க்குமா?

 தாமரை இலை மேல் படர்ந்த

ஒற்றைப் பெருந்துளி நீரில்

சிறைப்பட்ட மீன்குஞ்சாக நான்..


சுற்றுச்சுவர் சுருங்கி

நெருக்கிக் கொண்டே வருகிறது

அகோரமாக ஓலமிடுகிறது மனம்..

மறந்தும் ஒரு முனகல் சத்தம் வெளிவரவில்லை.


மழைக்காக காத்துக்கொண்டே இருக்கிறேன்

வெளுத்துப் போய் காண்கிறது 

வானம்!


வானம் பொய்க்குமா?