தூக்கம் தொலைத்த இரவில்
ஏதோ ஒரு மூலையில்
முடிவின்றி நீளும்
இருண்ட முடிவிலியில்
கவனம் நிலைத்து நின்றபடி
நினைவுகள் தொடரவில்லை
தேடல்கள் எதுவுமில்லை
அழுத்திக்கொண்டிருக்கும்
ஏதோ ஒன்றின்
எடை மட்டும் கூடியபடி
வெளிவர மனமே இன்றி
விரும்பி தோற்றபடி இருக்க
மீண்டு வர இயலா
அந்தகாரத்துள்
இழுத்துக்கொண்டே
பயணிக்கிறது இரவு
இரவின் பிடியில்
நிழல் கனவு
நிஜம் கண்ணீர்
எவற்றிற்கும் நிறமில்லை
நானும், என் நிறமற்ற
இரவும் மட்டும்!!