Mar 17, 2012

கதறல்

கத்திக் கதறி கூப்பாடு போட்டு 
ஓய்ந்து சரிந்த 
தமிழனின் மரண ஓலத்துக்கு மட்டும் 
நம் காதுகள் 
செவிப்புலன் இழந்து போனதேனோ??

பிள்ளைகள் உடல் சிதைக்கப்பட்டு..
பெண்கள் மார் அறுக்கப்பட்டு.. 
நா வறண்டு கதறிச்செத்தவனுக்கு
இரண்டு சொட்டுக் கண்ணீர் விடுவதினும்
நூறாவது சதம் முக்கியமாகிப்போன 
மூடர்கள் நாம்.. 

ஐந்து குண்டுகள் மாரில் வாங்கிச் செத்தான்
அந்த பால்மணம் மாறா பாலகன்..
முதுகெலும்பில்லா மூடர்கள் நாம்..
வீட்டுக்குள் ஒளிந்துகொண்டோம்..
கொலைகாரனின் ஆதரவிற்காக 
எட்டப்பர்கள் ஆகிவிட்டோம்.. 

சொல்லி அழ வார்த்தைகள் இல்லை..
கேட்க ஒரே ஒரு கேள்வியுண்டு.. 
இந்தியன் ஏன் இவ்வளவு மலிந்து போனான்??