பின்னோக்கி முன்னோக்கி
எங்கெங்கோ ஓடி அலைந்தும்
எங்கெங்கோ ஓடி அலைந்தும்
கடைசியில் உன் முகம் நோக்கிடவே
கூடடைகின்றன உனக்கான
என் நினைவுகள்...
இடைவெளி தண்டனையில்
கணக்கிடுவதிலேயே
கடந்து போகும் நாட்கள்..
உன் வெட்கச் சிரிப்பின்
நினைவுகளில்
ஒற்றை நொடிப்பொழுது
கோடிட்டுப்போகும் புன்னகை...
ஒவ்வொரு முறையும்
நீ உன் காதல் சொல்கையில்
நீ உன் காதல் சொல்கையில்
கண்ணோரம் துளிர்த்து நிற்கும்
கண்ணீர்த்துளி...
நீயின்றி எனைப் பார்க்கையில்
ஓடி வந்து கைகோர்த்துக்கொள்ளும்
கடற்கரை மணலும்
ஆற்றங்கரைக் காற்றும்...
உன்னோடில்லா பொழுதுகள்
அத்தனையும்
நம் நினைவுகளுடனே....
ஒவ்வொரு மணித்துளியும்..
உன்னுடன்
உன்னுடையவளாய்
உன்னருகிலேயே
உனக்காக மட்டுமே
வாழ்ந்திட .......
நான்.......