திசை மறந்து
ஓடிசெல்கின்றன நினைவுகள்
கடிகார முட்களைப் போல்
துரத்திப் பிடித்தபடி ஒன்றும்
விட்டு விலகியபடி மற்றொன்றும்
கடந்து செல்லும் மனிதர்களில்
யாரோ ஒருவரின்
ஏதோ ஒரு சாயலோடு
சில நிகழ்வுகள் சில நினைவுகள்
பிடித்த பாட்டை முணுமுணுப்பதுபோல்
நாள்முழுதும் நீங்காமல்
இருபது நிமிட
தொலைப்பேசுதலில்
என் தூரத்து உலகிற்கும்
எனக்குமான இடைவெளியை
நிரப்பப் போராடும்
அம்மாக்களும் அம்மாச்சியும்..
நண்பனின் முகநூல் பக்கத்தின்
பழைய நாட்குறிப்பிலிருந்து
புதிதாய் பகிரப்பட்ட
ஒற்றைப் புகைப்படமுமே
இழந்தவற்றிற்கான
ஒற்றைப்பருக்கை இழப்பீடு...
பார்த்து பேசிச்சிரிக்க
பழகிய மனிதரில்லாமல்
ஏங்கித்தவிக்கையில்..