மணல் மணலா கோர்த்து வச்சு
மணி மணியா அலங்கரிச்சு
மயிலிறகு படுக்கையிட்டு
தகப்பன் கோட்டை ஒன்னு கட்டி வைக்க
வெள்ளெருக்கு நாரெடுத்து
பாட்டன் அரைஞாண் கொடி செய்ய
தங்கத்துல காதுக்கு
தாத்தன் குண்டுமணி தோடு செய்ய
வெள்ளி கொலுசெடுத்து
மாமன் தான் சீர் வைக்க
சொந்தம் அத்தனையும்
கைக்குள்ள முடிஞ்சுகொள்ள
அந்த நிலவே உசிர் கொண்டு
மகளாக எம்மடியில் உதிச்சாளே!
அவ உருட்டும் விழியாலே
உலகத்த சுழல வச்சா
பொக்க வாய் சிரிப்பாலே
காலத்த உறைய வச்சா!
அந்த நிலவத்தான் காட்டி
சோறூட்ட காத்திருக்கேன்
அவ மழலை மொழி கேட்க
நானுந்தான் தவங்கெடக்கேன்!!!