Dec 14, 2008

வாழ்க்கை


தேடல், தேவை

எதிர்பார்ப்பு, கனவு..

இவற்றை இன்பமாய் நினைத்து

வாழ்க்கையை வாழ்க்கையாய்

வாழ்பவனே மனிதனாகிறான்..

தேடல் இலக்கின்றி போகும்பொது

அவன் பைத்தியக்காரனாகிறான்

தேவைகள் எல்லை மீறும்போது

துரோகியாகிறான்

ஆசைகள் அளவின்றி வெறியாய் மாறும்போது

மிருகமாகிறான்

கனவுகள் பொய்க்கும் பொது

ஏமாளியாகிறான்

எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படும்போது

சவம் ஆகிறான்

ஏற்றமும் தாழ்வும் நிறைந்த

வாழ்வில்..

தாழ்வு நிலைக்கே

செத்துச் சுண்ணாம்பாகிவிட்டால்

இவன் ஏற்றதோடு

மனிதனாய் வாழ்வது

எப்போது.........??


No comments:

Post a Comment