Dec 14, 2008

தனிமை


எந்நேரமும்

ஒரே கூத்தும் கும்மாளமுமாய்

சுற்றிலும் ஒரு பட்டாளமாய்

பாடித்திரிந்த எனக்கு…

ஆரம்பத்தில்

தனிமையைக் கண்டால்

பயம், வெறுப்பு……..

அய்யோ…. தனியாய் இருப்பதா

என்று சோர்ந்து விழுந்த நான்……

இப்போதெல்லாம் தனிமையுடன்தான்

தனியாய் வாழ்கிறேன்..

மெல்ல மெல்ல தனிமை

என்னை தன் உற்ற துணையாய்

மாற்றிக்கொண்டது…

சுகமான நினைவுகளும்

இனிமையான கனவுகளும்

என்னுடன் மாநாடு போடுவது

தனிமையில் மட்டுமே…..

இதுவும் ஆனந்தமாய் உள்ளது……..


1 comment:

Arvind said...

thats true.....very true!

Post a Comment