Dec 14, 2008

ஆனந்தம்


குழந்தை…….

தானாய் அழுது…

தானாய் சிரித்து…

ஆசை ஏமாற்றம்

கள்ளம் கபடம்

எதுவுமே அறியாமல்

தன்னையே கூட உணராமல்

ஆனந்தமாய் சிரித்துக் கொண்டிருக்கும்

இயற்கையின் அதிசயம்…

வாழ்க்கையின் போராட்டங்களும்

சூட்சுமங்களும் தெரியாத

அதிருஷ்டசாலி…

வாழ்க்கை வாழ்வதற்கே

என்ற புரட்சிமொழி வேண்டாம்

பேர் வேண்டாம் புகழ் வேண்டாம்

நாலு பேருக்காக நடிக்கும்

இந்த அழுக்கு முகம் வேண்டாம்…

அதற்காக…

வாழ்க்கையே வெறுத்துவிட்டது என

சித்தாந்தமும் சந்நியாசமும் பேசவில்லை

எனக்கு ஆனந்தம் வேண்டும்..

அதிலும் பேரானந்தம் வேண்டும்..

அதனால் தாயே..

என்னை மீண்டும்

உன் கருவுக்குள் இழுத்துக்கொள்…

மீண்டும் குழந்தையாய் பிறந்து

சில காலம் ஆனந்தமாய் வாழ்ந்திடுவேன்…


No comments:

Post a Comment