Jan 11, 2009

சுமைதாங்கிக்கல்


தோற்பதர்க்க்காகவே நான்
என்னைத் தோற்கடிக்க
எத்தனையோ விஷயங்கள்...

வறண்டு போய்க் கிடந்த
என் இதயத்தில்
உன் நினைவுகளும் என் அழுகைகளும்
பாரம் ஏற்றிவிட்டன..

வெளியே சொன்னால்
அந்த வார்த்தைகளும்
பாரம் சேர்த்துவிடுமோ
என பயப்பட்டுக்கொண்டே
அமைதி காக்கிறேன்

சொல்ல வரும் பொது
உன் அமைதி என்னைத் தடுக்கிறது
நீ பேசும் பொது
இந்த நிலையாவது தொடரட்டும்
என நான் அடங்கிவிடுகிறேன்...


இந்த நினைவுகளைக்
களையாய் எண்ணி
கிள்ளி எறிகிறேன்
ஆனால் விருட்சமாய் வளர்கிறது...

உன்னை என்னிடம் சேர்க்கச் சொல்லி
இருக்கும் கடவுளிடம் எல்லாம் வேண்டுகிறேன்...
இப்போது மட்டும்
முகவரி தெரிந்ததா...?
என்று எள்ளி நகையாடுகின்றன...

இவற்றை வெறும் ஈர்ப்பு என்று
கூறிவிடாதே..
கருகிப்போய்விடும் என் இதயம்...
சாம்பலில் கூட
உன் நினைவுகளின் வாசம்...

முதல் நாள் பள்ளியில்
அப்பா எப்போ வருவார்
எனக் காத்திருக்கும்
குழந்தையாய்
உனக்காக நிதமும்
காத்துக்கொண்டிருக்கிறேன்...

பிறவாத கருவுக்கு மட்டும் இல்லை
சொல்லாத காதலுக்கும்
ஒரு நினைவுச் சின்னமாய்
சுமைதாங்கிக்கல்
எங்கோ இருந்து
கரிசனமாய் ஒரு பார்வை பார்த்தது...

3 comments:

Unknown said...

Hi,
Sorry to disturb you.
I was searching for one of my old friend who is from karur and some how i reached ur orkut page there i found this link. Its excellent. I want to leave u a scrap msg on ur orkut page but i couldnt as you were restricted it.
If possible can u send me some good links to read poems and short stories like the above.
This is my email id : mistory121@gmail.com
Im badly need it as im not in India.
Bye Nila Mahalea..

இராவணன் said...

இந்த நினைவுகளைக்
களையாய் எண்ணி
கிள்ளி எறிகிறேன்
ஆனால் விருட்சமாய் வளர்கிறது..

முதல் நாள் பள்ளியில்
அப்பா எப்போ வருவார்
எனக் காத்திருக்கும்
குழந்தையாய்
உனக்காக நிதமும்
காத்துக்கொண்டிருக்கிறேன்...

பிறவாத கருவுக்கு மட்டும் இல்லை
சொல்லாத காதலுக்கும்
ஒரு நினைவுச் சின்னமாய்
சுமைதாங்கிக்கல்
எங்கோ இருந்து
கரிசனமாய் ஒரு பார்வை பார்த்தது..

---பிடித்ததுங்க. வாழ்த்துக்கள்

இரசிகை said...

arumaiyaa..irunthathu.

Post a Comment