Jun 25, 2015

இரவின் காதலி-2

நினைவுகளின் பிரதிபலிப்பாய்
இரவின் பெருமூச்சுகள்
தூக்கத்தை முத்தமிட்டு
ஒத்தி வைக்கின்றன
 
இதுதான் சாக்கென்று
சலனமற்ற இருளின்
அகங்கார ஆலிங்கணம்
மீண்டு்ம் மீண்டும்
நிகழ்ந்தேறுகிறது
 
வியத்தல் விணை
விட்ட இடத்தினின்று
புனராவர்த்தம் செய்வது
முடியாது தொடர
 
ஆர்பரிப்பு அமைதியாகி
ஆனந்தம்
ஆழிப்பேரலையாகும் நேரம்
வைகறை வந்ததும்
விட்டொழித்துச் சென்றுவிட்டது
 
இறவாமல் பிறவாமல்
எனை ஆட்கொள்ள
இறைவனை வேண்டவில்லை
இருளிடம் மட்டும்
வேண்டுகிறேன்!!!

1 comment:

ஊமைக்கனவுகள் said...

“கனவு“ மெய்ப்பட வேண்டும்.

தொடர்கிறேன்.

நன்றி.

Post a Comment