Jan 8, 2015

தூக்கம் பறித்த இரவுகள்

சில நினைவுகள்
இரவுகளின்
சில நிமிடங்களைக்
கடன் வாங்கிக்கொள்கின்றன..

பிடித்த வரிகளுக்கிடையில்
லயித்த நொடிகள்
தூக்கம் களைத்துச்
செல்ல

கணத்த இதயத்துடன்
கவிதைக் காடுகளுக்குள்ளே
இரவின் உலாவல்
நிகழ்ந்தேறிக்கொண்டிருக்கிறது!!!


2 comments:

ஊமைக்கனவுகள் said...

கவிதைக் காடுகளில்
இரவின் உலாவலில்
வாசனையும் உடனழைத்துப் போகின்றீர்கள்..


அருமை..!

nila said...

நன்றி!!!

Post a Comment