நுரையீரல் முழுதும்
நிறைத்துக்கொண்ட
அவன் வாசம்
துணைநின்ற
தனிமையின் உச்சத்தில்
அவன் அருகின்றி
பிரக்ஞை
அற்றுப்போன
தருணங்கள்
மரணிக்கக்
காத்திருக்கின்றன!!!
அம்மரணத்தின்
மறுமுனையில்
ஜனனிக்கக் காத்திருக்கும்
கனவுகளுக்காக நான்!!!
இயல்பிற்கப்பாற்பட்ட
மொழியின் மௌனம்
சாத்தியமான
வேளைகளில்
விழிநீரின்
ஒற்றைப் பரிமான
வரைகோடுகள்
அவன் திசைநோக்கியே
இடமாற்றம் பெறுகின்றன!!!
6 comments:
மௌனத்தின் மறுமொழியாய்
ஜனனமும் மரணமும்....!
மெளனம் மறுமொழி சொலவதெல்லாம் நம்ம நிலாவுக்கு மட்டும்தான். :)
"Thalaivan" will be flattered for thalaivi's true-poem! :-)
நன்றி இராஜராஜேஸ்வரி :)
வாங்க வருண் :)
நன்றிகள் பல !!!
ஏதோ மௌனமாச்சும் மறுமொழி சொல்லுதே :)
விழிநீரின் இடமாற்றம்
கவிதையை இன்னொரு களத்திற்கு எழுத்துச் சொன்றுவிடுகிறது.
இவ்வளவுநாள் எப்படி இவற்றைப் பார்க்காமல் இருந்தேன்..?
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்கநன்றி ஊமைக்கனவுகள் :)
Post a Comment