கவிழக் காத்திருக்கும்
இரவுக்குள்
அடங்கியிருக்கும்
எதிர்பார்ப்புகள்
ஊடலும் கூடலும்
கூடல் நிமித்தமான ஊடலுமாய்!!!
முன்னிரவின்
இதழ் ஒற்றலில்
துவங்கி
பின்னிரவின்
இமை ஓரத்துக்
கண்ணீரென
இடைப்பட்ட
பயணத்தின்
நினைவுகள் யாவும்
தூரத்துத்
தேநீர் கடையில்
ஒலிக்கும்
நடுநிசி
இசைக்கோப்புகளின்
பல பல்லவிகளில்
இடைச்சொருகலாய்
வரவு செலவுக்
கணக்கில்
காதல் மிகுந்த
காமமும்
காமம் மிகுந்த
காதலும்!!!
3 comments:
கவித்துவம்
கவியும்
கவிதை..!
என் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கவிதை இதுனு நெனைக்கிறேன், நிலா. :)
இப்படியும் ஒரு பின்னூட்டம் இடலாம்! :)
நன்றி இராஜராஜேஸ்வரி
நன்றி வருண் :) :)
Post a Comment