Jan 13, 2013

என் அம்மா எழுதியதாய்..


புது நெல்லும் புது நாத்தும்
பசும்மஞ்சள் பசுஞ்சாணம்
புடிச்சு வெச்ச பிள்ளையாரும்

தாத்தன் கொண்டுவந்த
பொங்கச்சீர் பானையும்
வேம்பும் ஆவரம்பூவும்
சேர்த்து கட்டிவெச்ச காப்பும்

கணு பார்த்து வாங்கிவெச்ச
இருசோடி செங்கரும்பும்
செம்மண் கரைகட்டி
பச்சரிசி கோலமிட்டு
சீரமைச்ச வாசலும்

உன்ன காணாமத் தேடுதடி
என் கண்ணாணக்  கண்ணம்மா
விடியலும் கூடத்தான்
கொஞ்சம் மங்கலாய்க்
காணுதடி


வீடு நிறைக்க
சொந்தமிருந்தும்
விருந்தோம்ப பந்தமிருந்தும்
கைக்கெட்டா தூரத்திலே
கனவுபோல் நீயிருக்க

வெறிச்சோடியிருக்கும் வீட்டுக்குள்ள
பொங்கலென்ன தீவுளி என்ன
வருஷத்துக்கு ஒருமுறை
நீ வரும் நாளுக்காக
நித்தம் நித்தம்
காத்திருக்கேன்..


1 comment:

இராஜராஜேஸ்வரி said...

.
புது நெல்லும் புது நாத்தும்
பசும்மஞ்சள் பசுஞ்சாணம்
புடிச்சு வெச்ச பிள்ளையாரும்
வாழ்த்த இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்..

Post a Comment