அதீத வெறுப்பையும்
ஆழமான நேசத்தையும்
நிமிடத்திற்கு ஒன்றாய்
மாறி மாறி
உணரச் செய்கிறாய்..
நாட்களின் முடிவில்
துலாபாரம்
உன்னிடமே
கணத்துக் கிடக்கிறது!!
எனக்கான வரத்தையும்
உனக்கான சாபத்தையும்
சேர்த்தே தருகிறேன்
பிழைத்துப் போ!
அடுத்த ஜென்மத்திலும்
என்னவனாக
பிறக்கக் கடவது!!
No comments:
Post a Comment